Sunday, September 24, 2017

யார் first ?


                                                                    இறைவனுக்கு நன்றி 

 




             
                                   
சென்ற பதிவில் நாம் வாழும் பிரபஞ்சத்தின் பிரமாண்டமான வயதையும் அளவையும் பார்த்தோம் அப்படிப் பட்ட பிரபஞ்சத்தை பார்க்கும் போது நமது வாழ்வு எவ்வளவு அற்பம் என்று புரிந்திருக்கும்.
                     

             இப்படி பட்ட வாழ்க்கையில் நம் பிறப்பின் நோக்கம் நம் வாழ்க்கையை எதை நோக்கிப் பிரயாணிப்பது போன்ற தத்துவார்த்த பதிவுகளை பார்ப்பதற்கு முன் ஒரு சாரா சரி மனிதனாய் நம் அன்றாட வாழ்வில் எதையெல்லாம் முக்கியம்
, தினந்தோறும் நம் சிந்தனை செயல் எதுவெல்லாம் பிரதானம் மற்றும் எதற்கு எந்த வரிசையில் முக்கியத்துவம் அழிப்பது போன்ற பகிர்வுகளை பற்றி பார்ப்போம் .


                                              
நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் செயல்கள் பல முகங்களும் பரிணாமங்களை கொண்டது . அந்த பல்வேறு முகங்கள் கொண்ட செயல்கள் அவற்றின் முக்கியத்துவம் குறித்து புரிதலுடன்  அணுகுகிறோமா  என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
       

                 உதாரணத்துக்கு ஒருவர் தனது இருபத்தி வயதில் துவங்கி எப்போதும் விழிக்கும் முதல் உறங்கும் வரை தினந்தோறும் தனது வியாபாரம் தொழில் என்றே இருந்து வாழ்ந்து வாழ்க்கையை
முடித்தும் கொள்கிறார். மற்றொருவர் இளமையில் வாழ்வை அனுபவிக்கின் என்ற பேரில் தூங்கி , அன்றாட வாழ்வாதாரத்துக்கே போராடுகிறார்.
             மற்றொவர் எல்லா செயல்களை செய்தாலும் மகிழ்ச்சி சிரிப்பு இதெல்லாம் எதோ வேற்று கிரக வாசிகளுக்கு சொந்தம் போன்று சலிப்போடு வாழ்ந்தும் முடித்தும் கொள்கிறார். இன்னும் சிலர் எதற்கு தான் ஓடு கிறோம் என்பதே புரியாமல் தனது குடும்பத்தினருடன் பேசி எவ்வளவு நாட்கள் என்பதை கூட யோசிக்க வேண்டிய இடத்தில இருக்கிறார்கள்.


எல்லாத்துக்கும் மேல் இன்னும் சிலர் ஓடுகிற வேகத்தில் தொலைக்கக் கூடாததை  தொலைத்து மாத்திரைகளை வேர்க்கடை போல் தினமும் தின்று , ருஷியார ஒரு உணவு கூட உண்ணமுடியாமல் வலியோடு வாழ்ந்து முடிக்கிறார்கள்.


     நம் அன்றாட சாரா சரி வாழ்க்கை நிகழ்வுகளில் முடிவுகளில் முக்கியத்துவம் எதற்கு என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.




ஆரோக்யம் – ( நல்ல உடல் நலம் )






                                             சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழி நாம் அறிந்ததே.  நாம் எதற்க்காக எந்த செயல் செய்தாலும் அதன் நோக்கம் முடிவு இப்படி எதுவுமே நல்ல ஆரோக்கியம் இல்லை என்றால் அதை  பெற்று அனுபவிக்க முடியாது . ஒருவருக்கு பெரிய தொழில் அதிபர் ஆகா வேண்டும் என்பது லட்சியம் என்று வைத்துக் கொள்வோம் நல்ல ஆரோக்கியம் இல்லை என்றல் எப்படி அவரால் சிந்திக்க முடியும் அதை நோக்கி செயல் பட முடியும் அவர் நினைத்தபடி அந்த இடத்துக்கு வந்தாலும் எப்படி அதை ஆரோக்கியம் இல்லை என்றால் அனுபவிக்க முடியும். பணம் தான் இலக்கு என்றால் ஒரு நாள் பல கோடிகள் கையில் இருந்தாலும் உடல் நோய் உற்று இருந்தால் எப்படி அதை அனுபவிப்பது. ஆகா பிரதானமாக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது உடல் ஆரோக்கியத்துக்கே.









குடும்ப நலன் : 

                                 
அடுத்து முக்கியத்துவம் தரவேண்டியது நமது குடும்பத்துக்கே. மனைவி, மக்கள்,  பெற்றோர், உடன் பிறந்தோர் என்று குடும்ப உறவுகளை பேணுவது முக்கியம்.

                                        நாம் வெற்றி பெற்ற போது கொண்டாடி மகிழ்வதும் அந்த வெற்றியே தள்ளி போகும் போது ஆறுதல் கூறுவது குடும்ப உறவுகளே.   விழித்தது முதல் உறங்குவது வரை நமக்காக சுவாசிப்பவர்கள் சொந்தங்களே.
                                      அவர்களின் பிரச்சனைகளை கேட்டு சரி செய்து அவர்களின் அன்றாட நிகழ்வுகளில் கலந்து கொண்டு பாராட்டி இப்படி  நம் குடும்ப கடமைகளுக்கு அடுத்து முக்கியத்துவம் தர வேண்டும்.
                       
நான் ரசித்த சில திரைப்பட வரிகள் 


 
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு

கனிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்

கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம்
கணிரசமாம் மது அருந்தி                   களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம்
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு


மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு ' 








பொருளாதார வளம் :


        வள்ளுவர் வாக்குக்கிணங்க 

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு
வையகத்தில் வாழும்போது, பொருள் செல்வம் இல்லையென்றால், வாழ்க்கையே வீணாகும்


                            அன்றாட தேவைகளுக்கேய போராட்டத்துடன் வாழ்கை நகர்வு இருக்கக்கூடாது
. அடிப்படை தேவை உணவு, உடை, இல்லம் போக கொஞ்சமாவது வாங்கியில் சேமிப்பு , தங்க அணிகலன், ஆயுள் காப்பீடு அடுத்து முடிந்தால் சிறிதேனும் வேளாண்மை நிலம் இருப்பது சிறப்பு .
என்னதான் தத்துவம் பேசினாலும் வாழ்வாதாரத்திர்ற்கு
 கடையில் பொருள் வாங்க காசு கொடுத்தால் தான் கிடைக்கும் அனால் அதை எவ்வளவு எதற்காக எப்படி ஈட்டுகிறோம் என்ற புரிதல் இருக்க வேண்டும்




தொழில் முன்னேற்றம்
:

 




                                   வணிகம் செய்தாலும், சொந்த தொழில் செய்தாலும் , அலுவலகங்களில் பணி புரிந்தாலும் சரி,  நம் மனதில் கொள்ளவேண்டியது அடுத்து இன்னும் முன்னேறுவது எப்படி என்று புதிய புதிய வாய்ப்புகள் குறித்து சிந்தித்து கொண்டே இருக்கவேண்டும் உயர்ந்த சிந்தையோடு.






அறிவு வளர்ச்சி
:




                   
ஒவ்வொரு நாளும் புதிது என்று நாம் அறிவு வளர்ச்சியையே பழக்கமாகவே செயல்படுத்த வேண்டு. அறிவு வளர்ச்சி என்பது அறிவியல் பற்றி புத்தகங்கள் வாங்கி படிப்பது இல்லை, தின்தோறும் நாம் செய்யும்  செயல்கள் இன்னும் எப்படி சிறப்பாக செயல் படுத்துவது, மாற்றி

யோசிப்பது
, புது புது விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்வது போன்று   மனதை  புதிப்பித்து கொண்டே இருக்கவேண்டும்.  உண்மையான அறிவு ஞானம் எது  என்பதில் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் .







சமுதாய அக்கறை
:

          நாம் வாழும் மண்ணில் நம்மை சுற்றி உள்ள சமுதாயத்தின் மீது அக்கறையோடு வாழ் வேண்டும்.  எது நடந்தால் எனக்கென்ன என்று இல்லாமல் சுற்று புற தூய்மை, நாட்டு பற்று நலம் , முன்னேற்றம் இப்படி நம்மால் முடிந்தவரை தொண்டாற்ற வேண்டும் . சாலை ஓரங்களில் மரங்கள் நடுவதில் ஆரம்பித்து உங்களால் முடிந்தவரை உதவலாம் .


ாடென்ன செய்தது ந‌ம‌க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு .

சமூக அக்கறையுடன் பொது தொண்டுகள் செய்வோர்க்கு தெய்வமும் இயற்கையம் உதவ காத்துக்கொண்டிருக்கும் என்பதை மறக்கவேண்டாம்
.









மகிழ்ச்சி கொண்டாட்டம் :





          
எதுவாயினும் நாளை காலை விடியத்தான் போகிறது இரவும் வரத்தான் போகிறது.  நாம் செய்யும் செயல்களில் சலிப்போடு செய்யாமல், எப்போதும் மகிஞ்சியும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும்.



மகிழ்ச்சி என்பது எதை சார்ந்ததும் இல்லாமல் மனத்திர்ற்குள் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு செயலில் கலந்தே இருக்க வேண்டும்
. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று குடும்பத்தினரோடு மகிகிழ்ச்சியை கழிப்பது அவசியம் .

அவ்வப்போது சிறிய பயணங்களும் . வருடம் ஒரு புது இடங்களுக்கு பிற மாநிலம் பிற நாடு என்று அவர் அவருக்கு முடிந்தவரை மகிழ்ச்சிக் காகவே ஒரு பயணம் செல்வது சிறந்த பழக்கம்.










இறைலயம்
;


மேற் கூறிய அத்தனை செயல்களிலும் இறைலயம் கலந்தே இருப்பது சிறப்பு.   இறைலயத்தையும் வாழ்க்கையம் பிரித்து பார்க்காமல் சேர்ந்தே இருக்கும் வன்னம் பார்த்துக்கொள்வது உண்மை அறிவு வளர்ச்சிக்கும், தெளிந்த ஆனந்தத்திற்கும் உதவும் . இறைலயம் என்பது வாழ்கை கச்சேரியில் எப்போதும்  இடைவிடாமல் ஒலிக்கவேண்டிய ஒரு ஸ்ருதி .     


                              
       

ஆரோக்யம்
 

            

 
குடும்ப நலன்
     
 பொருளாதார வளம் - தொழில் முன்னேற்றம்

 
அறிவு வளர்ச்சி

 
சமுதாய அக்கறை

மகிழ்ச்சி கொண்டாட்டம்

                                                                               .                                     

   
          றை                  ம்
________________________________________________________



மேற்கண்ட அம்சங்களின் முக்கியத்துவம் உணர்ந்து வரிசைப்படுத்தி தேவைக்கேற்ப அளவை கூட்டியும் குறைத்தும்
,  ஒரு நிலையில் தேங்கி விடாமல் அனைத்திலும் அம்சங்களையும் எது முக்கியம் என்று பிரித்து பார்த்து பகிர்ந்து வாழ்வை வகுத்துக்கொள்வது நன்று .



நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ சில எளிய வழிகள் ,
உறவுகளுடன் மகிழ்ச்சியோடு இருப்பது எப்படி
 ,

செல்வவளம் பெறுக கடை பிடிக்க வேண்டியவை
 ,

இப்படி மேற்கூறிய தலைப்புகளை சற்று விரிவாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்.




வாழ்க வளமுடன் !!!



No comments:

Post a Comment