Thursday, January 20, 2011

எம்.ஜி.ஆர் ? - நம்பியார் ?- 1



வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று மனிதர்களை எதிர்கொள்வது , அதாவது " Handling the People , " என்று சொன்னால் அது சரியாக இருக்கும் .



அடிப்படையில் நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள அல்லது நாம் அன்றாடம் சந்திக்கின்றவர்கள் இப்படி யாரை எடுத்துக்கொண்டாலும் சரி , நாம் அந்த நபரை பற்றிய நம் அபிப்ராயம் ஒன்றை நம் மனதில் ஏற்படுத்து கொள்கிறோம் . அது கணிசமான நேரங்களில் இரண்டு விதமாகத்தான் இருக்கும் ஒன்று அவர் நல்லவர் அல்லது மோசமான நபர் , இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் அவர் M.G.R ,. அல்லது நம்பியார் இப்படி திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல வைத்து கொள்கின்றோம் .


ஆனால் உன்மையில் கணிசமானவர்கள் அப்படி இல்லை . இரண்டும் கலந்தவர்கலாகதான் இருகின்றார்கள் , இந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த " ஈரம் " என்ற ஒரு திரைபடத்தில் வரும் சில வார்த்தைகளை இங்கே சேர்ப்பது இந்த பதிவிற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன் ,அந்த திரைப்படத்தின் climax இல் , சில வசனங்கள் ,


" ஆண்டவன் உலகை படைத்தான் , முதல் யுகத்தில் அனைவரையும் நல்லவர்களாக படைத்தான் , அங்கு நடந்த வினை பதிவின் காரணமாக , அடுத்த யுகத்தில் தீயவர்களையும் நல்லவர்கலயும் படைத்தான் ,ஆனால் தனி தனி இடத்தில் படைத்தான். அங்கு செய்த நல்வினை தீவினை காரணமாக அடுத்த யுகத்தில் நல்லவர்கலயும் தீயவர்கலயும் ஒரே இடத்தில சேர்ந்து வாழ படைத்தான் ஆண்டவன் .அடுத்து இந்த கடைசி யுகத்தில் நல்லவர்களும் தீயவர்களும் ஒரே மனிதனுக்குள் வைத்தான் இறைவன் ,"என்பது போல் இருக்கும்


அதுபோல , நாம் யாரயும் நல்லவர்கள் அல்ல தீயவர்கள் என்ற அடிப்படை என்னத்தை நீக்கி , எல்லோரையும் எதிர் கொள்ள வேண்டும் .இங்கு யாரும் முழு M.G.R ம் இல்லை நம்பியாரும் இல்லை .

சரி எப்படி இருக்கின்றார்கள் என்பதை பார்த்தோம் , நாம் எப்படி நடந்துகொள்வது நல்லது , அது நமக்கும் மற்றும் எல்லோருக்கும் எப்படி நன்மை பயக்கும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.. .


வாழ்க வளமுடன் !!!












2 comments:

  1. அன்புள்ள சௌந்தர் ,
    அருமையான பதிவுடன் உங்களின் கருத்தும் அழகாக இருக்கிறது.

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. dear sounder seen your blog excellent job

    ReplyDelete